மனைவியை உலக்கையால் தாக்கி கொலை செய்த கணவன்

புத்தளம் பகுதியில் உலக்கையால் தாக்கிக் குடும்பப் பெண்ணொருவரை தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் புத்தளம் – மாதம்பை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் கணவரே அவரைத் இவ்வாறு தாக்கிப் படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்த தாய்

அப்பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவர் இந்த வெறியாட்டத்தைப் புரிந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையாளியைக் கைது செய்துள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.