டுவிட்டர் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதாக கூறும் எலான் மஸ்க்

விளம்பரங்கள் குறைந்துள்ளமையினால் டுவிட்டர் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதாக அதன் உரிமையாளரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபரில் டுவிட்டர் நிறுவனத்தை எலோன் மஸ்க்  44 பில்லியன் (£33.6bn) டொலருக்கு வாங்கினார். 

அதனையடுத்து, 2022 இல் டுவிட்டரின் 7,500 ஊழியர்களில் பாதிப் பேரை பணிநீக்கம் செய்தார்.

டுவிட்டர் கணக்குக்கு கட்டணம் நிர்ணயித்தார். டுவிட்டரில் லாபத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டுவிட்டர் நிறுவனம் மூலம் தனது பணத்தை இழந்து வருவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

நாங்கள் இன்னும் எதிர்மறையான பணப்புழக்கத்தில் இருக்கிறோம். விளம்பர வரவால் 50 சதவீதம் குறைந்துள்ளது. அதிக கடன் சுமையும் உள்ளது. இதனால் டுவிட்டர் மேலும் பணத்தை இழக்கிறது. நாங்கள் நேர்மறையான பணப்புழக்கத்தை அடைய வேண்டும் என்றார்.

இந்நிலையில்,  டுவிட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் திரெட்ஸ் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

சில மதிப்பீடுகளின்படி, திரெட்ஸ் தற்போது 150 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இன்ஸ்டாகிராம் மூலமாக திரெட்ஸ் கணக்கு எளிதாக ஆரம்பிக்கலாம் என்பதால் திரெட்ஸ் வெகுவிரைவாக மக்களிடையே பிரபலமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.