ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி

 பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட 5 அமைப்புகள் மீதான தடையை நீக்கி பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அதன்படி 5 முஸ்லிம் அமைப்புகளின் தடைகளை நீக்கி பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

11 அமைப்புகள் தீவிரவாத அமைப்பு

தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் நலன் கருதி, 11 அமைப்புகள் தீவிரவாத அமைப்புகளைத் தடை செய்யும் சட்டத்தின் கீழ், 13 ஏப்ரல் 2021 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் தடை செய்யப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.