திடீரென அதிகரித்த எலுமிச்சையின் விலை!

நாட்டில் நிலவும் வறட்சி காலநிலை காரணமாக விளைச்சல் குறைந்ததால் ஒரு எலுமிச்சை விலை 50 ரூபா வரை அதிகரித்துள்ளது.

இலங்கையில் இன்றைய நாட்களில் சந்தையில் 1 கிலோ எலுமிச்சை 1000 ரூபாக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், எலுமிச்சை விலை அதிகரிப்பால் சிறு காய்கறி சந்தைகளில் எலுமிச்சை விற்பனை செய்யப்படுவதில்லை என வியாபாரிகள் கூறுகின்றனர்.