யாழில் கோர விபத்து – கணவன் பலி – ஆபத்தான நிலையில் இளம் மனைவி !

யாழ்ப்பாணம் -நாவற்குழி சந்தியில் இன்று விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரின் பவுசர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் ஆணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் விபத்துக்குள்ளானவர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பவுசர் வாகனத்துடன் மோதிய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மன்னாரைச் சேர்ந்தவர்கள் என அறியமுடிகின்றது.

Previous articleயாழ் உடுத்துறையில் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது!
Next articleயாழில் பெண்களின் ஆடைகளை அணிந்து கொள்ளையிட்ட கும்பல் !!