வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3; பெரு மகிழ்ச்சியில் இந்தியா!

சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ள நிலையில் இந்தியா வெற்றிக்களிப்பில் உள்ளது.

நிலவுக்கான இஸ்ரோவின் இரண்டாவது முயற்சி தோல்வியடைந்தது முதல் தனது அடுத்த முயற்சிக்காக இஸ்ரோ கடும் உழைப்பில் ஈடுபட்ட நிலையில் சந்திரயான்-3 (14 0 விண்கலம் நிலவுக்கு செலுத்தப்பட்டது.

இந்நிலையில் சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தயைரிறங்கியுள்ளது. இதனையடுத்து சந்திராயன் 3 இன் லாண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்குவதை உறுதிசெய்வதற்காக அவர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்ட நிலையில் இந்தியாவில் மட்டுமாலாது உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் இந்தியர்கள் பிரார்த்தனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.