இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்தமாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கு அடுத்தமாதம் விஜயம் மேற்கொள்ளவுள்ள ராஜ்நாத் சிங் இந்தியா மூலோபாயரீதியில் முதலீடு செய்துள்ள திருகோணமலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையில் பெட்ரோலிய உற்பத்திகளை பரிமாற்றம் செய்வதற்கான குழாய்உருவாக்கம்  தொடர்பிலேயே அமைச்சரின் திருகோணமலை விஜயம் அமைந்திருக்கும்.