கனடாவில் பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை!

 கனடா வான்கூவருக்கு கிழக்கே 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோக்விட்லாமில் என்ற பகுதிக்கு பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபர் ஒருவருக்கு கைது வாரண்ட் வழங்குவதற்காக சென்றனர்.

அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 51 வயதான போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தார்.

அத்துடன் இந்த சம்பவத்தில் 2 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு உள்ளனர்.