யாழ் விபத்தில் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

யாழில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவு திடீரென திறக்கப்பட்டதால் வீதியில் மோட்டார் சைக்கிள் பயணித்தவர் கார் கதவில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி உப்புமடம் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.சுன்னாகத்தைச் சேர்ந்த லோகராசா தர்சன் என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார்.

காரினை எடுக்க முயன்றதால் பதற்ற நிலை

அவர் மேசன் தொழிலாளி என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் விபத்துக்கு காரணமான காரினை அங்கிருந்து எடுத்து செல்ல முற்பட்ட போது அப்பகுதியில் கூடியவர்கள் முரண்பட்டனர்.

உரிய விசாரணைகள் இடம்பெறாது சடலத்தை அப்புறப்படுத்தியதுடன் விபத்துக்கு காரணமான காரினை பொலிஸார் எடுத்துச் செல்வதை அனுமதிக்க முடியாது என அவர்கள் தெரிவித்ததை அடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவத்திற்கு காரணமான காரின் சாரதி பொலிஸில் சரண்டைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.