பொலிஸ் நிலையத்துக்குள் தன் மீது தானே தீவைத்த பெண்ணால் பரபரப்பு

பதுளை-   ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்துக்குள் தன் மீது தீ வைத்துக் கொண்ட பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தின் மலசலக்கூடத்தில் வைத்து தன் மீது தீ வைத்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த பெண் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.