ஆட்சேர்ப்பு முறையில் மாற்றம்!

நிதி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு முறைமையில் விரிவான மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற நிதி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (21) காலை தெரணியகல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ரஞ்சித் சியம்பலாபிட்டிய இவ்வாறு தெரிவித்தார்.