இறுதிப் போட்டிக்கு செல்லும் தென்னாப்பிரிக்கா

ரக்பி உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா ரக்பி அணி தகுதி பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று அதிகாலை இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் 15க்கு 16 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதன்படி நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியுடன் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள ரக்பி உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி மோதவுள்ளது.