லலித்கொத்தலாவலயின் மரணத்தில் சந்தேகம்

இலங்கையின் பிரபல வர்த்தக பிரமுகர் லலித்கொத்தலாவலயின் மரணம் குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள அவரது குடும்பத்தினர் பிரேதபரிசோதனை இடம்பெறவேண்டும் என நீதிமன்றத்திடம் வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.

லலித்கொத்தலாவலயின் மரணம் தொடர்பில் பிரதேச பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையை குடும்ப உறுப்பினர்கள் நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திடம் முன்வைத்தனர்.

லலித்கொத்தலாவலையின் மரணம் சந்தேகத்திற்கு இடமான முறையில் இடம்பெற்றுள்ளது என சட்டத்தரணிகள் மூலம் குடும்பத்தினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஐந்துவருடங்களாக ஒருகுழுவினரால் லலித்கொத்தலாவல பணயக்கைதிபோல வைக்கப்பட்டிருந்தார் அவரை குடும்ப உறவினர்கள் பார்வையிடுவதற்கு கூட அனுமதிவழங்கப்படவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோள்களை ஆராய்ந்த நீதவான் லலித்கொத்தலாவலயின் உடலை பிரதேச பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.