மாவீரர் துயிலமில்ல சிரமதான பணிகள் முன்னெடுப்பு!

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று (22) சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இவ் சிரமதான பணியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும் கலந்துகொண்டு சிரமதான பணியில் ஈடுபட்டார்.

இதன் போது மாவீரர் நாள் தொடர்பாக சாள்ஸ் நிர்மலநாதன் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்டிக்கும் முகமாக இந்த சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றன.