கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

ஆசிரியர் – அதிபர் போராட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

போராட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கவலை தெரிவிப்பதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் தீர்க்க ஆசிரியர் – அதிபர் உள்ளிட்ட கல்வித் துறைகள் செயற்படும் வேளையில் மாநாடு ஒன்றுக்காக  கல்வியமைச்சிர் வௌிநாடு சென்றுள்ள நிலையில், இடம்பெற்ற இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24ஆம் திகதி பத்தரமுல்லை பெலவத்தையில் நடைபெற்ற ஆசிரியர் – அதிபர் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியிருந்த நிலையில் அதில் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.