நிர்வாண புகைப்படங்களை விற்பனை செய்த இருவருக்கு விளக்கமறியல்

பெண்களின் நிர்வாண புகைப்படங்களை ஒன்லைனில் ஊடாக விண்ணப்பதாரர்களுக்கு விற்பனை செய்து ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் வசூலித்த இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று (26)  ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டார்.

சந்தேகநபர்கள் இருவரும் 18 மற்றும் 19 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையவில்லை என விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.