கஞ்சா மரத்தை நட்டவர் கைது

அனுமதிப்பத்திரம் இன்றி 6 1/2 அடி உயரமான கஞ்சா மரத்தை பயிரிட்ட சந்தேக நபர் அம்பாறை உஹன பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரிகம பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி 6 1/2 அடி உயரமான கஞ்சா கஞ்சா பயிரிடப்பட்டு வந்த நிலையில் நேற்று (26) மாலை பொலிஸாரின் சுற்றி வளைப்பின் போது கைப்பற்றப்பட்டுள்ளது.

உஹன பொலிஸ் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் இதன் போது சுமார் 6 1/2 அடி உயரமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன்இ அவை சுமார் 3 – 6 அடி என உயரம் வரை வளர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சா செடி அழிக்கப்பட்டதுடன், கைதான சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உஹன பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.