இந்திய கிரிகெட் சபை மேற்கொண்டுள்ள அவசர தீர்மானம்!

உலக கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது.

அதன்படி டெல்லி மற்றும் மும்பையில் நடைபெறும் போட்டிகளின் போது பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த நகரங்களில் காற்று மாசு அபாயகரமான அளவில் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜே.ஷாவினால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, டெல்லி மற்றும் மும்பையை மையமாக கொண்டு நடைபெறும் உலக கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கீழ் வரும் எந்த ஒரு போட்டியிலும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.