யாழில் மோசமான செயலில் ஈடுபட்ட பெண் கைது!

  யாழ்ப்பாணத்தில் கசிப்புடன் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு வியாபாரம் நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டுக்கு சென்று சோதனை நடாத்திய போது 5 லீட்டர் கசிப்பை பொலிஸார் மீட்டனர்.

அதனை அடுத்து கசிப்பை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டில் இருந்த 27 வயதான பெண்ணை கைது செய்தனர்.