நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

காத்மாண்டுவில் இருந்து வடக்கே 169 கிலோமீற்றர் தொலைவில் இன்று (05) காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கு நேபாளத்தில் கடந்த 3ஆம் திகதி இரவு ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இதுவரை 157 பேர் உயிரிழந்தனர்.

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களைக் மீட்பதற்கான  தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.