ஶ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் புதிய தீர்மானம்

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு கிடைத்த அதிகாரத்தின் பிரகாரம் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அமைச்சரால் 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதன் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் தற்போதைய நிர்வாகத்தின் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (06) வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று நியமிக்கப்பட்ட புதிய இடைக்காலக் குழு அதன் பின்னர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பு கீழே..