மக்களுக்கு முக்கிய அறிவிப்பு சுகாதார பரிசோதகர்கள் என்ற பெயரில் மோசடி!

பொது சுகாதார பரிசோதகர்கள் என தெரிவித்து பல்வேறு மோசடி சம்பவங்கள் இடம்பெற்று வருவதால் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க பொருளாளர் ரொஷான் குமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, பணம் பறிக்கும்நோக்கில் தொலைபேசி அழைப்புகள் ஏதேனும் வந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க பொருளாளர் ரொஷான் குமார பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.