யாழ் மக்களின் குடிநீர் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு முறையான தீர்வு காணப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

அத்துடன் வடக்கு – கிழக்கில் வாழும் மக்களுக்கு பல்வேறு உதவி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று (13.11.2023) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பதவி விலகல்
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் இதுவரை மக்கள் மீள்குடியேற்றம் செய்யாத இடங்களின் அபிவிருத்திக்கு 2, 000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் வடக்கு கடற்றொழிலாளர்களின் கடற்றொழிலை அபிவிருத்தி செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் கடற்றொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க தனியார் துறையுடன் இணைந்ததாக திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்படி யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படை பணிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.