தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சடலமாக மீட்க்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள்ஆரம்பம்!

  தனியார் தொலைக்காட்சி சேவையொன்றின் ஒளிப்பதிவாளர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வெயங்கொட – கட்டுவஸ்கொட பகுதியில் இருந்தே குறித்த ஒளிப்பதிவாளரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கம்பஹா – அத்தனகல பகுதியில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையான ஒளிப்பதிவாளரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டவர் வத்துப்பிட்டிவெல தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெயாங்கொடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.