இலங்கையின் புதிய நுண்கடன் திட்டம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

   இலங்கையில் நுண்கடன் திட்டத்தின் கொடுமைகளுக்குள் தற்போது ஆதிவாசி சமூகத்தினரும் அகப்பட்டுள்ளார்கள்.

மத்திய வங்கியால் மாத்திரமே இந்தப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நுண்கடன் திட்டங்களை கண்காணிக்கும் வகையில் அதிகாரசபைக்கான சட்டவரைவு இன்னும் ஓரிரு மாதங்களில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.