இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்!

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும்.

1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் எடுத்த முடிவின்படி, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் பல்வேறு வேலைத் திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.

மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரசியல், கலாச்சார மற்றும் மனித உரிமைகள் கட்டமைப்பிற்குள் மக்களின் உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பதை விளக்குவதே இந்த நிகழ்ச்சிகளின் நோக்கமாகும்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.