கையடக்க தொலைபேசி குறுஞ்செய்திகளுக்கு வரி அறவிட தீர்மானம்

கையடக்க தொலைபேசி குறுஞ்செய்திகளுக்கு வரி அறவிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கையடக்க தொலைபேசி குறுஞ்செய்திகளுக்கு மேலதிகமாக நிலையான தொலைபேசிகள் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கும் வரி அறவிடப்படும் எனவும் கூறியுள்ளார்.

அரச வருமானம் அதிகரிப்பு

அரச வருமானத்தை அதிகரிப்பதற்காகவே இந்த வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.