உணவுகுழாயில் தேனீ கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

  இந்தியாவில் உணவுகுழாயில் தேனீ ஒன்று கடித்தமையில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்,  இடம்பெற்றுள்ளது.

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள பெரேசியா பகுதியைச் சேர்ந்தவர் ஹிரேந்திரா சிங் (வயது 22). வீட்டில் இருந்த போது தாகம் எடுத்துள்ளால், ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்து குடித்துள்ளார்.

சுவாச கோளாறு
தண்ணீரை குடித்த சிறிது நேரத்திலேயே ஹிரேந்திரா சிங்கிற்கு சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, அவருக்கு சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனிடையே, மருத்துவர்கள், ஹிரேந்திரா சிங் சிகிச்சையின் போது வாந்தி எடுத்ததில் தேனீ ​ஒன்று வெளியில் வந்துதது. இந்த நிலையில் அந்த தேனீ அவரது உணவுகுழாய்க்குள் சென்று கடித்துள்ளதே ​இறப்புக்கு காரணம் என தெரிவித்தனர்.