வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அரசு!

வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இது ந்தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்,

நாட்டில் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்து காணப்படும் சந்தர்ப்பத்தில் வரி திருத்தங்களை பொதுமக்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

ஆனால் அவ்வாறு செய்யாமல் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. வரி அதிகரிப்பதை மக்கள் தாங்கிக்கொண்டாலும் அது தொடர்பில் மக்களிடம் எதிர்ப்பு இருக்கின்றதாகவும் அவர் கூறினார்.

வரி அதிகரிப்பதானது அரச வருமானத்தை ஈட்டுவதற்காக மாத்திரம் முன்னெடுக்கப்படும் மாற்று வழி அல்லஎன தெரிவித்த அமைச்சர், வரி அறவிடல் மற்றும் வரி செலுத்தல் நடவடிக்கையில் அனைவருக்கும் அது சமமாக பகிரப்படுகின்றது எனவும் அமைச்சர் செஹான் சேமசிங்க கூறினார்.