பாலம் இடிந்து விழுந்ததில் இரு பெண்கள் காயம்!

  உமா ஓயாவின் கிளை நதியான மெதகதுர ஓயாவின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்ட பாதுகாப்பற்ற கொங்கிரீட் பாலம் இடிந்து விழுந்ததில் பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

கடும் மழை காரணமாக இடிந்து வீழ்ந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் ஹப்புத்தளை, மெதகதுர பிரதேசத்தை சேர்ந்த 65 மற்றும் 54 வயதுடைய இரு பெண்கள் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

பாலத்தின் மீது பெண்கள் நடந்து சென்று கொண்டிருந்த போதே பாலம் உடைந்து மெதகதுர ஓயாவில் வீழ்ந்துள்ளது.