கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது

கொலன்னாவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொலன்னாவ மற்றும் தெமட்டகொடை பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைதாகினர்.

இதன்போது சந்தேகநபர்களிடம் 07 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

மேலதிக விசாரணைகளில் மோட்டார் சைக்கிள், 02 மன்னா கத்திகள், ஒரு பொம்மை கைத்துப்பாக்கி, 07 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 02 தலைக்கவசங்கள் மற்றும் அவர்கள் அணிந்திருந்த மேலங்கிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.