இலங்கை கடற்ப்பரப்பில் கைதான 6 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது ஒரு படகில் ஆறு மீனவர்கள் 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.

இந்திய மீனவர்கள் ஆறு பேரும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (14) முற்படுத்தப்பட்டபோது டிசம்பர் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்