நீரில் மூழ்கிய சிறுவன் மாயம்!

13 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுவன் நேற்று (14) பிற்பகல் மொதரவத்தை வாவியில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடப் போவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சிறுவன் நீராடச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காணாமல் போன சிறுவனை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் கடற்படையின் சூழியோடிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.