இம்ரான் கானுக்கு பிணை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அரசு ரகசியங்களை வெளியிட்டது தொடர்பான குற்றச்சாட்டில் அவர் சமீபத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், அவர் விடுவிக்கப்படும் திகதி குறித்து இன்னும்  தகவல்கள் எதுவும் வௌியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இம்ரான் கான் தொடர்பான இந்த வழக்கு ‘சைஃபர்’ வழக்கு என்று அழைக்கப்படுகிறது.