கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது!

தங்க நகைகள் மற்றும் முச்சக்கரவண்டி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொம்பனித்தெரு பகுதியில் நேற்று (27) இரவு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழு தங்கப் பொருட்களை விற்பனை செய்ய வந்த சந்தேகத்திற்குரிய மூவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 23, 29 மற்றும் 32 வயதுடைய எகொடஉயன மற்றும் மித்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, களுத்துறை வடக்கு, தெற்கு, கம்பஹா ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாரதியை தாக்கி முச்சக்கரவண்டியை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

விசாரணையின் போது பெண்களின் கழுத்தில் இருந்த தங்க நகைகள் பல திருடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட முச்சக்கரவண்டி எரிபொருள் தீர்ந்து போனதால் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் கைவிடப்பட்ட நிலையில் முச்சக்கரவண்டியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.