அடையளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

வெலிபன்ன, பல்லேகொட வீதியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெலிப்பன்ன பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 35  முதல் 40 வயது மதிக்கத்தக்கவர்  என தெரிவிக்கப்படுகிறது.

நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வெலிப்பன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.