கில்மிஷாவை நேரில் சந்தித்து பாராட்டிய சிறீதரன்

கில்மிஷாவை, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று (29) நேரில் சென்று வாழ்த்தி மதிப்பளித்தார்.

தன் இசையால் உலகத்தமிழர்களின் உள்ளம் கவர்ந்த இளம் பாடகியாக உருப்பெற்று, ஈழத்தமிழர்களின் அடையாளமாய் இந்தியத் தொலைக்காட்சியின் சரிகமப இசை நிகழ்வில் வெற்றியாளராக முடிசூடி நாடு திரும்பிய கில்மிஷாவை, அரியாலையில் உள்ள வீட்டிற்கு சென்ற
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  வாழ்த்தி மதிப்பளித்தார்.

இதன்போது கில்மிஷாவின் குடும்பத்தினரும் உடனிருந்தனர்.