மரக்கறிகளின் விலை பாரிய அளவில் அதிகரிப்பு!

நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

தற்போது பெய்து வரும் கனமழையால் மரக்கறி முற்றாக அழிந்துள்ளதால், விலை மேலும் தாறுமாறாக உயர்ந்துள்ளதாக பொருளாதார மையங்களின் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மரக்கறிகளின் விலை உயர்வால் நுகர்வோர் காய்கறிகளை வாங்க வருவதில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கட்டுகஸ்தோட்டை பொருளாதார நிலையத்தில் கரட் 700 ரூபாவாகவும், போஞ்சி 500 ரூபாவாகவும், லீக்ஸ் 400 ரூபாவாகவும், பச்சை மிளகாய் 1200 ரூபாய், தக்காளி 500 ரூபாய், கத்தரி 600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.