மாத்தறை சிறைச்சாலையில் மற்றுமோர் கைதி உயிரிழப்பு!

மாத்தறை சிறைச்சாலையின் மற்றுமொரு கைதி மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கைதியே உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய நபரே இவ்வாறு மரணித்தார்.