வௌ்ளத்தில் மூழ்கியது ரயில் பாதை!

மட்டக்களப்பு மார்க்கத்தில் செல்லும் ரயில்  சேவைகள் பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கனமழையுடன் ரயில் பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்த வழியான ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 

இதன் காரணமாக மட்டக்களப்புக்கு இயக்கப்படவிருந்த இரவு அஞ்சல் ரயிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.