ரொறன்ரோவில் ஏற்பட்டுள்ள மோசமான நிலை!

ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் மோசமான குளிர் காலநிலை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ மாகாணம் முழுவதிலும் நிலவிய பனிப்புயல் தாக்கத்தின் விளைவாக, ரொறன்ரோவில் தற்பொழுது கடும் குளிர் நிலைமை ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரத்தில் கடுமையான குளிரை உணர நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோவில் மணிக்கு 40 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் குளிர் காற்று வீசும் எனவும் இதனால் கடும் குளிர் நிலையை உணர நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மறை 15 பாகை செல்சியஸ் வரையில் வெப்பநிலை பதிவாகும் என கனடிய சுற்றாடல் முகவம் தெரிவித்துள்ளது.