மலையக தியாகிகள் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பெருந்தோட்ட மக்களுக்காக உயிர் நீத்த தியாகி முல்லை கோவிந்தனின் நினைவாக மலையக தியாகிகள் தினம் உணர்வுப்பூர்வமாக நினைவுகூறப்பட்டுள்ளது.

இந்த நினைவேந்தல் மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்றைய தினம் (14.01.2024) நுவரெலியாவில் தியாகிகளுக்காக புதிதாக அமைக்கப்பட்ட தூபிக்கு அருகாமையில் நடைபெற்றது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுப் போராட்டத்தில் உயிர்தியாகம் செய்து, மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்த முல்லோயா கோவிந்தன் உயிர் துறந்த ஜனவரி 10 ஆம் திகதியை, மலையக தியாகிகள் தினமாக நினைவு கூறி மலையக தியாகிகள் நாள் நினைவுக்கூறப்படுகிறது.

முல்லோயா கோவிந்தன் இலங்கை வரலாற்றில் நீங்கா இடத்தில் இருப்பவர். அவரை மலையகத்தின் முதல் தியாகியாகத் தான் அறியப்பட்டிருக்கிறார். அவர் இலங்கையின் உழைக்கும் வர்க்கத்தின் முதல் தியாகியாகவும் கருதப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

உரிமைப்போராட்டம்
மலையகத் தமிழர்களுக்கான தொழில்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமைப்போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூர்ந்து சர்வமத தலைவர்கள் சமய நிகழ்வுகளுடன் நினைவு தூபிக்கு மலர் தூவி குறித்த நினைவேந்தலை மேற்கொண்டனர்.

குறித்த நிகழ்வில் ஜனநாயக முன்னணியின் செயலாளர் ஜீவன் ராஜேந்திரன் , மலைக தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் புஷ்பா விஸ்வநாதன் , முன்னால் மாகாண சபை உறுப்பினர் ராஜாராம் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மஹிந்த சில்வா, வலப்பனை பிரதேச சபை உறுப்பினர்களான தேவப்பிரியா , அரிச்சந்திரன் ஜனார்த்தன் மற்றும் பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும், தியாகிகளின் உறவினர்களும் தொழிற்சங்கவாதிகளும் கலந்து கொண்டனர்.