பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!

களுத்துறை பயாகல கடற்கரையிலிருந்து 20 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேருவளை உள்ளுராட்சி சபையின் பலகல சத்திபொலவுக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் இருந்தே இன்றைய தினம் (15-01-2024) இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் கடலில் நீராடச் சென்று உயிரிழந்தாரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பயாகல பெலபொல்வத்த செடியார் பியகம பகுதியைச் சேர்ந்த இவர் தனது பாட்டி வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு நேற்று (14-01-2024) மதியம் வீட்டில் இருந்துவெளியேறிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியாவந்துள்ளது.