உணவு இன்றி வாடிய நபருக்கு நிகழ்ந்த சோகம்!

உணவு இல்லாமல் இரு நாட்கள் பட்டினியால் வாடிய நபர் ஒருவர் பாக்கு மரத்தில் ஏறி பாக்கு திருட முற்பட்டவேளையில் மரத்திலிருந்து தவறிவிழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கடுகண்ணாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் கடுகண்ணாவை – கம்பளை வீதியில் நாவுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது மாரிமுத்து மனோகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர், திருமணமாகாதவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாவுல்ல பிரதேசத்தில் உள்ள காணியொன்றுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பாக்கு மரத்தில் ஏறிகொண்டிருந்த போதே கீழே விழுந்து மரணமடைந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக, கண்டி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டது.

கண்டி தேசிய வைத்தியசாலையின் நிபுணர் சட்ட வைத்தியர் ஏ.பி. ஜெயசூரிய சடலத்தின் தடயவியல் பரிசோதனையின் போது உயிரிழந்தவர் இரண்டு நாட்களாக உணவு உண்ணவில்லை என தெரியவந்துள்ளது.