பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

   பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் அல்-அதில் பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை ஈரான் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (16) நடத்தியது.

இந்தத் தகவலை ஈரான் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்தது. இது அணுசக்தி நாடான பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரு நாட்டு உறவில் ஏற்கெனவே ஏற்பட்டுள்ள விரிசலை மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும் , பாகிஸ்தான் தரப்பில் இந்தத் தாக்குதல் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

சன்னி பிரிவு பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் அல்-அதில், ஈரானையொட்டிய, பாகிஸ்தான் எல்லையிலிருந்து செயல்பட்டு வருகிறது.

அதேவேளை ஈராக்கில் நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.