வீட்டு பணியாளர்களுக்கான கட்டணத்தை குறைத்த சவுதிஅரேபியா!

வீட்டு பணியாட்களை வேலைக்கு அமர்த்துவதற்காக அறவிடப்படும் கட்டணத்தை குறைக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது.

பிலிப்பைன்ஸ், இலங்கை, பங்களாதேஷ், உகாண்டா, கென்யா மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட பல நாடுகளின் வீட்டுப் பணியாளர்கள் தொடர்பில் சவுதி அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, பிலிப்பைன்ஸுக்கு 15,900 இருந்து 14,700 சவூதி ரியால்களாகவும், இலங்கைக்கு 15,000 இருந்து 13,800 சவுதி ரியால்களாகவும், பங்களாதேஷுக்கு 13,000 இருந்து 11,750 சவுதி ரியால்களாகவும் , கென்யாவுக்கு 10,870 இருந்து 9,000 சவுதி ரியால்களாகவும், உகாண்டாவுக்கு 9,500 இருந்து 8,300 சவுதி ரியால்களாகவும், எத்தியோப்பியாவிற்கு 6,900 இருந்து 5,900 சவுதி ரியால்களாகவும்  கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

அந்தந்த நாட்டு மக்களை வீட்டு வேலையாட்களாக வேலைக்கு அமர்த்துவதில் ஏற்படும் அதிக செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.