கணவரை பிரிந்த பிரியங்கா!

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் பிரியங்கா. அவர் மாகாபா ஆனந்த் உடன் சேர்ந்து செய்யும் கலாட்டா தான் பல நிகழ்ச்சிகள் ரசிகர்களை அதிகம் கவர காரணமாகவும் இருக்கிறது.

பிக் பாஸ் ஷோவில் பங்கேற்றபோது பிரியங்கா அதிகம் நெகடிவ் ட்ரோல்களை தான் பெற்றார். இருப்பினும் மீண்டும் தொகுப்பாளராக வந்து அவர் கலக்கி வரும் நிலையில், அவர் மீது இருந்த விமர்சனங்கள் எல்லாம் காணாமல்போனது.

பிரியங்கா பிக் பாஸ் ஷோவில் இருந்தபோது அவர் கணவரை பிரிந்தது பற்றி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கும் அவர் அது பற்ற வாய்திறக்கவில்லை.

பிரியங்காவின் அம்மா வாங்கிய சத்தியம்

இந்நிலையில் பிரியங்கா மற்றும் அவரது அம்மா இருவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அம்மா பிரியங்கா திருமண வாழ்க்கை பற்றி பேசி இருக்கிறார்.

பிரியங்கா முந்தைய வாழ்க்கையில் செய்த தவறு போல இனி செய்யக்கூடாது. அவர் சரியான ஒன்றை தேர்வு செய்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என அவரது அம்மா கூறி இருக்கிறார்.