செந்தில் தொண்டமானை கௌரவித்த வைரமுத்து!

  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் செயற்பாட்டுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்

செந்தில் தொண்டமான் அன்று மகாகவி பாரதியார் சொன்னதை இன்று நடைமுறைப்படுத்தி வருகிறார் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் பாரம்பரியத்தை மீட்டெடுத்த ஆளுநர் செந்தில் தொண்டமானை அகமகிழ்ந்து பாட்டெடுத்து வாழ்த்துவதாகவும் அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.