மோசமான செயலில் ஈடுபட்ட பெண் கைது!

தென்னிலங்கையில் முறையற்ற வகையில் சொத்துக்களை பெற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பில் பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகந்த பகுதியே சேர்ந்த 39 வயதான பெண்ணே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோசடி சொத்து
குறித்த பெண்ணிடமிருந்து சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.