வாய்ப்பு கேட்ட நண்பரை அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்

“நடிகர் சிவகார்த்திகேயனிடம் வாய்ப்பு கேட்டதற்கு பணம் கொடுத்து அசிங்கப்படுத்தி விட்டார்”என நடிகர் பாண்டி பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சிவகார்த்திகேயன்
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து கோலிவுட்டில் பிரபலமானவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாகி வெற்றிநடைப் போட்டுக் கொண்டிருக்கின்றது.

சமீபக்காலமாக சமூக வலைத்தளங்களில் சிவகார்த்திகேயனுடைய பெயர் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் இமான் என்றும் சொல்லாம்.

என்னை கண்டுக் கொள்ளவில்லை..

இந்த நிலையில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகிய நடிகர் பாண்டி பேட்டியொன்றில் சிவகார்த்திகேயன் பற்றி புது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

அதாவது, “பாண்டியும் சிவகார்த்திகேயனும் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றும் பொழுதே நல்ல நண்பர்களாக பழகி வந்துள்ளனர். சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்த பின்னர் பாண்டி அவரிடம் சென்று நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார்.

அதற்கு சிவகார்த்திகேயனின் மேனேஜர் பணம் கொடுத்துள்ளார். வேண்டாம் என கூறியதும் அவர் சிவாவிடம் என்ன கூறினார் என்று தெரியவில்லை. மாறாக சமீபத்தில் ஒரு நிகழ்வில் அவரை கண்டேன் அப்போது “சிவா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றேன், பேசாமல் சிவகார்த்திகேயன் சென்று விட்டார்” என கவலையாக பகிர்ந்துள்ளார்.

இவர் இப்படி பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ப்ளு சட்டை மாறன் இந்த காணொளியை அவரின் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இவர் கூறியதை கேட்ட சிவகார்த்திகேயனின் ரசிகர்கள், “ இவருக்கு இப்படியொரு பக்கம் உள்ளதா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.